பதிவு செய்த நாள்
05 அக்2016
03:02
புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், கடந்த செப்டம்பரில், 30 ஆயிரத்து, 562 டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், கடந்த செப்., மாதம், 30 ஆயிரத்து, 562 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 18 ஆயிரத்து, 087 என்றளவில் குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் உள்நாட்டு டிராக்டர் விற்பனை, 70 சதவீதம் உயர்ந்து, 17 ஆயிரத்து, 052 என்ற எண்ணிக்கையில் இருந்து, 29 ஆயிரத்து, 035 ஆக அதிகரித்துள்ளது; ஏற்றுமதி, 48 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,035ல் இருந்து, 1,527 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த செப்., மாதத்தில், அதிகளவில் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளோம். பருவமழை நன்கு பெய்துள்ளதால், பண்டிகை காலத்தில் டிராக்டர் விற்பனை மேலும் அதிகரிக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|