பதிவு செய்த நாள்
05 அக்2016
03:03
புதுடில்லி : டாடா மோட்டார்ஸ், கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
உள்நாட்டைச் சேர்ந்த, டாடா மோட்டார்ஸ், கார், வர்த்தக வாகனம், பஸ் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, கார் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, டாடா, கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, டாடா மோட்டார்சின் கார் பிரிவு தலைவர், மாயாங் பரீக் கூறியதாவது:தற்போது, கார் தயாரிப்பு மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சில நிறுவனங்கள், கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. எங்கள் நிறுவனம், நீண்ட நாட்களாக, விலை மாற்றம் செய்யவில்லை. எனவே, மூலப்பொருட்கள் விலை உயர்வால், எங்கள் நிறுவனமும், கார் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|