பதிவு செய்த நாள்
05 அக்2016
03:04
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், சிறிய நகரங்கள், புற நகரங்கள், கிராமப்புறங்களில், தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன்படி, பி.பி.ஓ., எனப்படும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணிகளை பெற்று, முடித்து தரும் மையங்களை, சிறிய நகரங்களில் அமைக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த வகையில், வாரணாசி, சிலிகுரி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில், 9,000 பேர் பணியாற்றக் கூடிய, ‘கால் சென்டர்’ மையங்களுக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், அமேசான், டி.சி.எஸ்., உள்ளிட்ட, 50 நிறுவனங்கள், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், 60 இடங்களில், கால் சென்டர்களை அமைக்க உள்ளன. ‘‘இந்த வசதி, பணிக்காக பெரிய நகரங்களை தேடாமல், அவரவர், சொந்த இடத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும்,’’ என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|