‘ரெப்போ’ வட்டி குறைப்பு: ரிசர்வ் வங்கி அதி­ரடி‘ரெப்போ’ வட்டி குறைப்பு: ரிசர்வ் வங்கி அதி­ரடி ... கான்­டி­னென்டல் வேர்­ஹ­வுசிங் பங்கு வெளி­யீட்­டுக்கு தயா­ரா­கி­றது கான்­டி­னென்டல் வேர்­ஹ­வுசிங் பங்கு வெளி­யீட்­டுக்கு தயா­ரா­கி­றது ...
பொரு­ளா­தார வளர்ச்சியில் வலி­மை­; இந்­தி­யா­வுக்கு உலக வங்கி பாராட்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2016
03:08

புது­டில்லி : ‘இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி வலி­மை­யாக உள்­ளது; இது, மேலும் வலுப்­பெறும்’ என, உலக வங்கி தெரி­வித்து உள்­ளது. இவ்­வங்கி, தெற்­கா­சிய நாடு­களின் பொரு­ளா­தார நிலை பற்­றிய ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விபரம்: நடப்­பாண்டு, இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.6 சத­வீதம் என்­ற­ளவில், தொடர்ந்து வலு­வா­கவே இருக்கும்.நாடு முழு­வதும் பர­வ­லாக பெய்­துள்ள பரு­வ­ம­ழையால், விவ­சாயத் துறையில் நில­விய மந்த நிலை மாறும்; அத்­துறை மீண்டும் எழுச்சி காணும். ஏழா­வது ஊதியக் குழுவின் பரிந்­து­ரையை அமல்­ப­டுத்­தி­யதால், மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதியம் உயர்ந்­துள்­ளது.
சூடு பிடிக்கும்இதனால், பணப்­பு­ழக்கம் பெருகும்; மக்கள், பொருட்கள் வாங்­கு­வது அதி­க­ரிக்கும். இது, தொழில் உற்­பத்தி பெரு­கவும், ஏற்­று­மதி அதி­க­ரிக்­கவும் துணை புரியும். இதன் மூலம், சுணக்கம் கண்­டி­ருந்த தனியார் துறை முத­லீ­டுகள் சூடு பிடிக்கும். இந்த மதிப்­பீட்டின் அடிப்­ப­டையில், அடுத்த ஆண்டு, நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.7 சத­வீ­த­மாக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.நாட்டின் வேக­மான பொரு­ளா­தார வளர்ச்சி, வறு­மையை ஒழிப்­பதில், முக்­கிய பங்­காற்றும். சமீப கால­மாக, இந்­தியா, வறுமை ஒழிப்பில் வெற்றி கண்டு வரு­கி­றது. ஆனால், அது பர­வ­லாக இல்லை. ஏற்­க­னவே, நல்ல நிலையில் உள்ள மாநி­லங்­களும், சமூக அமைப்­பு­களும், மேலும் வளர்ச்சி பெற்று வரு­கின்­றன.
ஆகவே, வறுமை ஒழிப்பு நட­வ­டிக்­கை­களால், பயன் பெறாத பெண்கள் சமூகம், பழங்­கு­டி­யினர் உள்­ளிட்­டோரை மேம்­ப­டுத்த வேண்­டிய முக்­கிய சவால், இந்­தி­யா­வுக்கு உள்­ளது. குறிப்­பாக, ஆரோக்­கியம், சத்­து­ணவு, தர­மான கல்வி உள்­ளிட்ட வச­திகள், அனை­வ­ருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மேற்­கொண்ட வரி மற்றும் ஊதிய சீர்­தி­ருத்­தங்கள், குறிப்­பாக, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நிறை­வேற்றம், பரு­வ­மழை பொழிவு ஆகி­யவை, கிராமம் மற்றும் நகர்ப்­புற பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு துணை புரியும்.
சவால்கள்அதே­ச­மயம், கொள்கை திட்­டங்­களை அமல்­ப­டுத்­து­வதில் காணப்­படும் நிச்­ச­ய­மற்ற நிலை, நிதிப் பிரச்­னைகள் உள்­ளிட்ட, முக்­கிய சவால்­களும் அப்­ப­டியே உள்­ளன. அவற்­றையும், இந்­தியா சமா­ளித்­தாக வேண்டும்.நாட்டின் பொரு­ளா­தாரம் வளர்ச்­சி­ய­டையும் போது, வறுமை ஒழிப்பும் பர­வ­லாக இருக்­கு­மாறு, இந்­தியா, பார்த்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சியம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
சர்­வ­தேச நெருக்­கடி, சீனாவின் மந்த நிலை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யிலும், உலக பொரு­ளா­தார வளர்ச்­சியில், தெற்­கா­சிய நாடுகள் சிறந்து விளங்­கு­கின்­றன.– உலக வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)