பதிவு செய்த நாள்
06 அக்2016
07:26
புதுடில்லி : கான்டினென்டல் வேர்ஹவுசிங் நிறுவனம், முதன்மை பங்கு வெளியீட்டின் மூலமாக நிதி திரட்ட, ‘செபி’யிடம், வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கான்டினென்டல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன், லாஜிஸ்டிக் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 419 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிதியை, கடனை திரும்ப செலுத்துவதற்கும், புதிதாக இயந்திரங்கள் வாங்கவும்; ஆமதாபாத், பானிபட் ஆகிய இடங்களில், புதிதாக சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, பங்கு வெளியீட்டிற்கு, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் அனுமதி கோரி, வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கான்டினென்டல் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை, ஆக்சிஸ் கேப்பிடல், ஆம்பிட், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|