இந்தியாவில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்: உலக வங்கிஇந்தியாவில் பறிபோகும் வேலைவாய்ப்புகள்: உலக வங்கி ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.59 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.59 ...
பழைய ஜவுளி இயந்­தி­ரங்­களால் உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2016
07:31

புது­டில்லி : ‘‘அரசு மானி­ய­முடன், வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யாகும் ஜவுளி இயந்­தி­ரங்­களால், உள்­நாட்டில், தொழில்­நுட்ப ஜவுளி இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன,’’ என, மத்­திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரி­வித்து உள்ளார்.
டில்­லியில், நேஷனல் இன்ஸ்­டி­டியூட் ஆப் பேஷன் டெக்­னா­லஜி மையத்தின், பட்­ட­ம­ளிப்பு விழா நடை­பெற்­றது. இதில், அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்­கேற்று, மாண­வர்­க­ளுக்கு பட்டம் வழங்கி உரை­யாற்­றினார். அப்­போது, அவர் பேசி­ய­தா­வது: இந்­திய ஜவுளித் துறையின் வளர்ச்­சிக்கு, மத்­திய அரசு, ஏரா­ள­மான ஊக்­கச்­ச­லு­கை­களை வழங்கி வரு­கி­றது. அது போல, வெளி­நா­டு­களில் இருந்து, தொழில்­நுட்ப ஜவுளி ரகங்­களை தயா­ரிக்கும் பழைய இயந்­தி­ரங்­களின் இறக்­கு­ம­திக்கும், மானியச் சலுகை வழங்­கப்­ப­டு­கி­றது. ஜவுளித் துறையை பொறுத்­த­வரை, மிக அதி­க­ள­வி­லான மானியம், பழைய இயந்­தி­ரங்கள் இறக்­கு­ம­திக்கு செல்­கி­றது. இது, உள்­நாட்டில், தொழில்­நுட்ப ஜவுளி இயந்­திர தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை பாதிக்­கி­றது.
ஆதரவளிக்க வேண்டும்அது­மட்­டு­மின்றி, சாதா­ரண ஜவுளி அல்­லது தொழில்­நுட்ப ஜவு­ளி­களை வடி­வ­மைக்கும் துறை­யி­னரும், இதனால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இந்­தி­யா­விற்கு, சுய­சார்பு நாடு என்ற பெருமை உள்­ளது. அதை, மேலும் வலுப்­ப­டுத்த வேண்டும். உள்­நாட்டில், தொழில்­நுட்ப ஜவுளி இயந்­திர தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், வடி­வ­மைப்­பா­ளர்கள் ஆகி­யோ­ருக்கு, இயன்ற வகையில் ஆத­ர­வ­ளிக்க வேண்டும். மத்­திய ஜவுளி அமைச்­சகம், அதற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளும். பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு இடை­யிலும், தீவி­ர­மாக கல்வி பயின்று, ஆடை வடி­வ­மைப்பில் பட்டம் பெறும், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் தேவன்ஷி மற்றும் அனில் ஆகி­யோரின் விடா முயற்­சியை பாராட்­டு­கிறேன்.
மாண­வர்கள், புதிய முயற்­சி­களில் கள­மி­றங்க வேண்டும்; நவீ­ன­மான வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்க வேண்டும். குறிப்­பாக, ஜவு­ளியில், கழிவு இல்­லாமல், ஆடை­களை வடி­வ­மைக்கும் கலையில், கவனம் செலுத்த வேண்டும். கைத்­த­றியில் புது­மை­யான, வித­வி­த­மான ஆடை­களை வடி­வ­மைப்­பதில், ஆர்­வ­முடன் ஈடு­பட வேண்டும்.
சிறப்பான எதிர்காலம்தற்­போ­தைய சூழலில், எதி­ரி­க­ளிடம் இருந்து தற்­காத்துக் கொள்ளும் நவீன ரக, பாது­காப்பு ஆடை­க­ளுக்கு வர­வேற்பு பெருகி வரு­கி­றது. அத்­த­கைய ஆடை­களை வடி­வ­மைக்கும் மாண­வர்­க­ளுக்கு, சிறப்­பான எதிர்­காலம் காத்­தி­ருக்­கி­றது. இது போன்ற, புதிய வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்­கு­வதன் மூலம், மாண­வர்கள், தங்கள் திற­மையை மேலும் வளர்த்து கொள்ள முடியும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)