ஜவுளி துறையில் குறையும் அன்­னிய முத­லீடுஜவுளி துறையில் குறையும் அன்­னிய முத­லீடு ... இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு  : 66.75 இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.75 ...
அடுத்த 5 ஆண்­டு­களில்... ரொக்க பரி­வர்த்­த­னை­களை குறைத்தால் இந்­தி­யா­வுக்கு ரூ.70,000 கோடி மிச்­ச­மாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2016
07:28

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ரொக்கப் பரி­வர்த்­த­னைகள் குறைந்து, ‘டிஜிட்டல்’ வழி­யி­லான பணப் பரி­வர்த்­த­னைகள் அதி­க­ரித்தால், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் மிச்­ச­மாகும்’ என, விசா நிறு­வனம் தெரி­வித்து உள்­ளது.
இது தொடர்­பாக, இந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை விபரம்: மக்கள் தொகை அதி­க­முள்ள இந்­தி­யாவில், ரொக்கப் பரி­வர்த்­தனை பிர­தா­ன­மாக உள்­ளது. கணினி, மொபைல் போன், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ போன்­றவை வாயி­லாக, ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்­பத்தில் மேற்­கொள்­ளப்­படும் பணப் பரி­வர்த்­த­னைகள் குறை­வாக உள்­ளன.
சலுகைகள்ரொக்கப் பரி­வர்த்­த­னையால், நேரம், மனித உழைப்பு உள்­ளிட்­டவை வீணா­கின்­றன. மேலும், நிதியை கையாள்­வது, பரா­ம­ரிப்­பது உள்­ளிட்ட பணி­க­ளுக்­காக, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்த, அதிகம் செல­விட வேண்­டி­யுள்­ளது. கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, இந்­திய குடும்­பங்கள், வணிக நிறு­வ­னங்கள், வங்­கிகள், ரிசர்வ் வங்கி ஆகிய நான்கு பிரி­வு­களில், ரொக்கப் பரி­வர்த்­தனை செல­வினம், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில், 1.7 சத­வீ­த­மாக உள்­ளது.
ரொக்கப் பரி­வர்த்­த­னையை குறைத்து, டிஜிட்டல் முறை­யி­லான பணப் பரி­மாற்­றங்­களை ஊக்­கு­விக்க, மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், பல்­வேறு திட்­டங்­களை வகுத்­துள்­ளன; அவை நடை­மு­றைக்கு வரும் பட்­சத்தில், டிஜிட்டல் பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இதன் மூலம், டெபிட், கிரெடிட் கார்டு உள்­ளிட்ட, டிஜிட்டல் பணப் பரி­வர்த்­த­னை­களை ஏற்கும், 13 லட்சம் விற்­பனை மையங்­களின் எண்­ணிக்கை, மூன்று மடங்கு அதி­க­ரித்து, 40 லட்­ச­மாக உயரும்; 4 கோடி குடும்­பங்கள், டிஜிட்டல் பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறும்.
இத்­துடன், மேலும் சில நட­வ­டிக்­கை­களை எடுப்­பதன் மூலம், டிஜிட்டல் பணப் பரி­வர்த்­த­னையை அதி­க­ரிக்­கலாம். குறிப்­பாக, டிஜிட்டல் முறையில் நிதியை நிர்­வ­கிக்கும் நுகர்­வோ­ருக்கும், வணி­கர்­க­ளுக்கும் சலு­கைகள் வழங்­கலாம்.
மாற்றங்கள்புதிய சட்ட, திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தலாம்; அரசு துறை சார்ந்த, அனைத்து ரொக்கப் பரி­வர்த்­த­னை­க­ளையும், டிஜிட்டல் முறைக்கு மாற்­றலாம்; புதிய தொழில்­நுட்­பங்­களை புகுத்­தலாம்; மாநி­லங்கள் இடை­யி­லான ரொக்கப் பரி­மாற்­றங்­களை குறைப்­பது தொடர்­பாக, சம்­பந்­தப்­பட்ட அர­சுகள், கூட்டு ஒப்­பந்தம் மேற்­கொள்­ளலாம். இது போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம், இந்­தி­யாவில் டிஜிட்டல் பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்கும். இதன் வாயி­லாக, இந்­தியா, அடுத்த ஐந்து ஆண்­டு­களில், ரொக்கப் பரி­வர்த்­தனை செலவில், 1,040 கோடி டாலர், அதா­வது, 70 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)