பதிவு செய்த நாள்
08 அக்2016
07:23
புதுடில்லி : மகிந்திரா அக்ரி சொல்யூஷன், நடப்பு நிதியாண்டில், 1,500 கோடி ரூபாய், விற்றுமுதல் ஈட்ட முடிவு செய்துள்ளது.
மகிந்திரா அண்ட் மகிந்திராவின் துணை நிறுவனமான, மகிந்திரா அக்ரி சொல்யூஷன்ஸ், வேளாண் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், 1,500 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மகிந்திரா அக்ரி நிறுவன அதிகாரி பார்தோ சக்ரபோர்தி கூறியதாவது: எங்கள் நிறுவனம், கடந்த நிதி ஆண்டில், 1,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டியது. கடந்த நான்கு ஆண்டுகளில், எட்டு மடங்கு வளர்ச்சி கண்டு உள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், எங்கள் சேவை தொடரும். தற்போது, போதுமான அளவுக்கு, மழைப் பொழிவு உள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 50 சதவீதம் அதிகரித்து, 1,500 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|