பதிவு செய்த நாள்
08 அக்2016
07:24
புதுடில்லி : மத்திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை இயக்குனர், ரமேஷ் அபிஷேக் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகியவை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றன. இவை, ‘சிகரெட், புகையிலை போன்ற துறைகளைச் சேர்ந்த, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை விட, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யலாமே’ என, வர்த்தக அமைப்புகள் கருத்து தெரிவித்து உள்ளன. அதனால், காப்பீட்டு துறையில் உள்ள, எல்.ஐ.சி., போன்ற நிறுவனங்களும், ஓய்வூதிய நிதியங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான கொள்கையை உருவாக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கும். இது தவிர, பிற வகைகளில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வலைதளத்தில் புதுமையான தொழில்களில் ஈடுபடுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|