பதிவு செய்த நாள்
08 அக்2016
07:28
புதுடில்லி : சீனாவிற்கு, வாழைப் பழம், மாதுளம் பழம் ஆகியவற்றின் ஏற்றுமதியை முடுக்கி விட, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. இதற்காக, வாழைப் பழம், மாதுளை ஆகியவற்றில், பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வு தொடர்பான நடவடிக்கைகளை, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு துவக்கிஉள்ளது.
ஏற்றுமதி இந்தியா, வாழைப் பழ உற்பத்தியில், முதலிடத்தில் உள்ளது; உலகளவிலான உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, 30 சதவீதமாக உள்ளது. இருந்த போதிலும், 1 சதவீத அளவிற்கே, இந்தியாவில் இருந்து வாழைப் பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தான் அதிகம் செல்கிறது. சீனாவில், வாழைப் பழத்திற்கு அதிக தேவை உள்ளது. அந்நாடு, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து, அதிகளவில் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கிறது; அடுத்து, ஈக்வடார் நாட்டில் இருந்து, அதிகம் இறக்குமதியாகிறது. இந்நிலையில், இந்திய வர்த்தகர்கள், சீனாவிற்கு வாழைப் பழம், மாதுளம் பழம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் முயற்சியில், தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்திய மாதுளம் பழம் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், பிரபாகர் சந்தானே கூறுகையில், ‘‘சில காரணங்களால், வழக்கமான நாடுகளுக்கு மாதுளம் பழ ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனால், புதிய சந்தைகளின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளோம்,’’ என்றார்.
மாம்பழங்கள்சீனா, சமீபத்தில், இந்திய திராட்சைப் பழங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கியது. இந்திய வணிகர்கள், அடுத்த ஆண்டு, சீனாவுக்கு, மாம்பழங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|