இந்­தி­யாவின் நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­களால் வணிக முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்இந்­தி­யாவின் நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­களால் வணிக முத­லீ­டுகள் ... ... இந்­தி­யாவில் ‘ஷாப்பிங் மால்’சிங்­கப்பூர் நிறு­வனம் அமைக்­கி­றது இந்­தி­யாவில் ‘ஷாப்பிங் மால்’சிங்­கப்பூர் நிறு­வனம் அமைக்­கி­றது ...
இணை­யத்தில் வாங்கி குவிக்கும் இந்­தி­யர்கள் :பண்­டிகை கால விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2016
01:18

புது­டில்லி:பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, இணை­ய­தள வணிக விற்­பனை, இம்­மா­தத்தில் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை எட்டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ள­தாக, ‘ரெட்செர்’ ஆய்வு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­தி­யாவில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், இணை­ய­தள வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இந்த நிறு­வ­னங்கள், நவ­ராத்­திரி, தீபா­வளி உள்­ளிட்ட பண்­டி­கை­களை முன்­னிட்டு, அதி­க­ளவில் பொருட்களை விற்­பனை செய்ய தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன. இதற்­காக, அவை, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, தள்­ளு­படி உள்­ளிட்ட பல சலு­கை­களை அறி­வித்­துள்­ளன. இணை­ய­தள வணிக நிறு­வ­னங்கள், பண்­டிகை கால விற்­ப­னையை, அக்., மாதம் முதல் வாரத்­தி­லேயே துவக்கி விட்­டன. குறிப்­பாக, அக்., 1 முதல், 6 வரை, அந்த நிறு­வ­னங்கள், சலுகை தினத்தை அறி­வித்­தன. அதன்­படி, அந்த நாட்­களில் மட்டும், அவை, 3.50 கோடி முதல் 4 கோடி பொருட்­களை விற்­பனை செய்­தி­ருக்­கலாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த அமேசான் நிறு­வனம், பண்­டிகை கால சலுகை விற்­ப­னையை, அக்., 1ல் துவக்கி, 5ல் முடித்­தது. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் நிறு­வ­னங்கள், அக்., 2ல் சலுகை விற்­ப­னையை துவக்­கின. அமே­சானின் விற்­பனை, கடந்த ஆண்டை விட, நடப்பு பண்­டிகை சீசனில், மூன்று மடங்கு அதி­க­ரித்து, 1.50 கோடி பொருட்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யாவில், இணை­ய­தள வணி­கத்தில் முதன் முறை­யாக, பிளிப்கார்ட் நிறு­வனம், ஒரே நாளில், 1,400 கோடி ரூபாயை தாண்டி விற்­பனை செய்­துள்­ளது. இந்த நிறு­வ­னங்­களின் பண்­டிகை கால விற்­பனை, தீபா­வ­ளி­யுடன் முடி­வ­டையும் என, தெரி­கி­றது.
இணை­ய­தள வணிக சந்தை, விரை­வாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இதற்­காக, அந்த நிறு­வ­னங்கள், விற்­ப­னையை விரி­வு­ப­டுத்தும் வகையில், கிடங்­குகள் கட்­டுதல், லாஜிஸ்டிக் போன்­ற­வற்றில் அதி­க­ளவில் முத­லீடு செய்து வரு­கின்­றன. பண்­டிகை கால விற்­ப­னையை முன்­னிட்டு, வாடிக்­கை­யா­ள­ருக்கு, பொருட்­களை உட­ன­டி­யாக, ‘டெலி­வரி’ செய்ய பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் ஆகி­யவை, தற்­கா­லி­க­மாக, 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்­கின. இதை­ய­டுத்து, இம்­மா­தத்தில் மட்டும், இணை­ய­தள வணிக விற்­பனை, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை எட்டும் என, மதிப்­பிட்டு உள்­ள­தாக, அந்த ஆய்வு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)