பதிவு செய்த நாள்
09 அக்2016
01:20
பெங்களூரு:கேபிடாலேண்ட் நிறுவனம், இந்தியாவில், கூடுதலாக, இரண்டு ஷாப்பிங் மால்களை துவக்க திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கேபிடாலேண்ட், ஷாப்பிங் மால் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் துணை நிறுவனமான ஆஸ்காட், குடியிருப்பு கட்டுமான துறையில் உள்ளது. இந்நிறுவனம், சந்தியா ஓட்டல்ஸ் உடன் இணைந்து, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இரண்டு; கர்நாடகா, பெங்களூரில் ஒன்று என, மூன்று குடியிருப்பு கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கேபிடாலேண்ட், இந்தியாவில், கூடுதலாக, இரண்டு ஷாப்பிங் மால்களை துவக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் தலைவர் லிம் மிங் யான் கூறுகையில், ‘‘இந்தியாவில், கட்டுமான துறை அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கிறது. எனவே, எங்கள் நிறுவனம், இந்தியாவில், அதிகளவில் ஷாப்பிங் மால்களை துவக்க உள்ளன,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|