பதிவு செய்த நாள்
09 அக்2016
01:22
ஜாம்ஜெட்பூர்:டாடா ஸ்டீல், கடந்த செப்., வரையிலான காலகட்டத்தில், 47 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல், உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான காலத்தில், 47.70 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 44.70 லட்சம் டன்னாக குறைந்திருந்தது.
கடந்த ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், அந்த நிறுவனத்தின் விற்பனை, 12.40 சதவீதம் உயர்ந்து, 23.30 லட்சம் டன்னில் இருந்து, 26.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், உருக்கு உற்பத்தி, 11 சதவீதம் உயர்ந்து, 27.10 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, டாடா ஸ்டீல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின், மோட்டார் வாகனங்களுக்கான உருக்கு விற்பனை, 7 சதவீதம் அதிகரித்துஉள்ளது. அந்த பிரிவு, உருக்கு விற்பனையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|