பதிவு செய்த நாள்
09 அக்2016
01:26
மும்பை;பங்குத் தரகு சேவையில் ஈடுபட்டு வரும், மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், பொதுத் துறை வங்கிகளை விட, தனியார் துறை வங்கிகளின் லாப வளர்ச்சி அதிகரிக்கும் என, தெரிகிறது.
வாராக்கடன் பிரச்னையால், பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. அவை, வாராக்கடன்களுக்கு, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதனால், மதிப்பீட்டு காலாண்டில், அவற்றின் லாப வளர்ச்சி, 12.7 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இதே காலத்தில், தனியார் வங்கிகளின் லாப வளர்ச்சி, 5 சதவீதமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.பொதுத் துறை வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகியவை, கடந்த ஓராண்டில், இடர்ப்பாடுள்ள கடன் அளவை, வியக்கத்தக்க அளவிற்கு குறைத்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|