உள்­நாட்டு நிறு­வ­னங்கள்சந்தை போட்டி திறனை மதிப்­பீடு செய்யவலை­த­ளத்தில் உதவி மையம்உள்­நாட்டு நிறு­வ­னங்கள்சந்தை போட்டி திறனை மதிப்­பீடு ... ... விழாக்­கால சலு­கைகள்; தரத்­திலும் கவனம் தேவை விழாக்­கால சலு­கைகள்; தரத்­திலும் கவனம் தேவை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இ-இன்சூரன்ஸ் கணக்கு துவக்கும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2016
04:36

காப்­பீடு ஆவ­ணங்­களை டிஜிட்டல் முறையில் பெற்­றுக்­கொள்ளும் இ–இன்­சூரன்ஸ் கணக்கு வச­தியை இந்­திய இன்­சூரன்ஸ் ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான ஐ.ஆர்.டி.ஏ., கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளது. இதன் படி அக்­டோபர், 1ம் தேதி முதல் இன்­சூரன்ஸ் பாலிசி வாங்­கு­ப­வர்கள், இ–இன்­சூரன்ஸ் கணக்கு வைத்­தி­ருப்­பது அவ­சியம்.
காப்­பீடு பாலி­சி­களை ஒரே இடத்தில் டிஜிட்டல் வடிவில் பரா­ம­ரித்து அணுக வழி செய்யும் இந்த வசதி சில ஆண்­டு­க­ளுக்கு முன் அறி­மு­க­மா­னாலும், இப்­போது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. ஆயுள் காப்­பீடு உட்­பட அனைத்து வகை­யான பாலி­சி­க­ளுக்கும் இது பொருந்தும். ஆண்டு பிரீ­மியம் தொகை, 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அல்­லது சம் அஷ்­யூர்டு தொகை, 5 முதல், 10 லட்சம் ரூபா­யாக இருந்தால், பாலி­சி­களை இ–இன்­சூரன்ஸ் கணக்கு இருந்தால் மட்­டுமே பெற­மு­டியும்.
பல­வித வச­திகள்இந்த முறையில் பல­வித வச­திகள் இருக்­கின்­றன. எல்லா பாலி­சி­க­ளையும் ஒரே இடத்தில் அணு­கலாம் என்­ப­தோடு எங்­கி­ருந்து வேண்­டு­மா­னாலும் பதி­வி­றக்கம் செய்து கொள்­ளலாம். பாலி­சிகள் தொலைந்து விடும் என்ற கவலை இல்­லாமல் பாது­காப்­பாக இருக்கும். மாற்­றங்­களை எளிதாக மேற்­கொள்­ளலாம். கே.ஒய்.சி., நடை­முறையும் எளி­தா­னது. பாலி­சி­தாரர் காப்பீடு நிறு­வன கிளைக்கு செல்ல வேண்­டிய தேவை இருக்­காது.
எப்­படி துவக்­கு­வது?இ–இன்­சூரன்ஸ் கணக்கு துவக்கும் நடை­முறை எளி­தா­னது. காப்­பீடு நிறு­வனம் மூலம் அல்­லது இதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரெபா­சிட்­டரி மூலம் கணக்கை துவக்கி கொள்­ளலாம். இதற்கு தனியே கட்­டணம் கிடை­யாது. முதலில் ஐ.ஆர்.டி.ஏ., நிய­மித்­துள்ள ஐந்து ரெபா­சிட்­டரி சேவை­களில் இருந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த நிறு­வன இணை­ய­த­ளத்­திற்கு விஜயம் செய்து, விண்­ணப்ப படி­வத்தை பூர்த்தி செய்து சமர்­பிக்க வேண்டும். கே.ஒய்.சி., ஆவணம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு விப­ரங்­களை சமர்­பிக்க வேண்டும். தேவை­யான ஆவ­ணங்கள் பற்­றிய விப­ரங்­களை இணை­யத்தில் தெரிந்து கொள்­ளலாம். இதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள அங்­கீ­ க­ரிக்­கப்­பட்ட நபர்­க­ளி­டமும் விண்­ணப்­பத்தை சமர்ப்­பிக்­கலாம். பின்னர் ரெபா­சிட்­டரி நிறு­வனம் இவற்றை சரி பார்த்து கணக்கை துவக்கும். கணக்கு துவக்­கப்­பட்­ட பின், 13 இலக்க கணக்கு எண் வழங்­கப்­படும். அதை இயக்­கு­வ­தற்­கான பயனர் பெயர் மற்றும் பாஸ்­வேர்டு வழங்­கப்­படும்.
பாலிசி வாங்­கு­வதுஇ–இன்­சூரன்ஸ் கணக்கு துவக்­கிய பின், புதி­தாக பாலிசி வாங்கும் போது இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்­திடம் உங்கள் கணக்கு எண்ணை தெரி­விக்க வேண்டும். இன்­சூரன்ஸ் நிறு­வனம் மூலம் கணக்கு துவக்­கி­யி­ருந்தால் பாலிசி வாங்­கு­வது தொடர்­பான நடை­மு­றை­களை நிறு­வ­னமே கவ­னித்­துக்­கொள்ளும். கணக்கு துவக்­கிய பின் புதிய பாலிசி டிஜிட்டல் வடிவில் அதில் இருக்கும். பழைய பாலி­சி­க­ளையும் முறை­யாக விண்­ணப்­பித்து டிஜிட்டல் வடிவில் மாற்­றிக்­கொள்­ளலாம். எல்லா பாலி­சி­க­ளை யும் ஒரே இடத்தில் அணு­கலாம். இதன் மூலமே பிரீ­மியம் செலுத்­தலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)