இந்­தி­யாவில் அலு­மி­னியம் பயன்­பாடு அதி­க­ரிக்கும்இந்­தி­யாவில் அலு­மி­னியம் பயன்­பாடு அதி­க­ரிக்கும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
பஹ்ரைன் நாட்டில் முத­லீடு செய்ய இந்­திய தொழி­ல­தி­பர்­க­ளுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2016
04:48

புது­டில்லி : பார­சீக வளை­குடா நாடு­களில் ஒன்­றான பஹ்ரைன், எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்­கு­கி­றது. இந்­நாடு, பல்­வேறு துறை­களில் அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்க்கும் முயற்­சியில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கி­றது.
இது தொடர்­பாக, பஹ்ரைன் பொரு­ளா­தார மேம்­பாட்டு வாரி­ய­மான, பி.இ.டி.பி.,யை சேர்ந்த குழு­வினர், இந்­தியா வந்து, முத­லீ­டு­களை ஈர்ப்­பது தொடர்­பாக, அரசு மற்றும் தனியார் நிறு­வ­னங்­க­ளுடன் பேச்சு நடத்­தினர்.
‘ஸ்டார்ட் அப்’இது குறித்து, பி.இ.டி.பி., நிர்­வாக இயக்­குனர், சைமன் கல்பின் கூறி­ய­தா­வது: பஹ்­ரைனில், சுற்­றுலா துறையில் ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­புகள் உள்­ளன. அதனால், இந்­திய ஓட்டல் நிறு­வ­னங்கள், பஹ்­ரைனில் ஓட்டல் வர்த்­த­கத்தில் ஈடு­ப­டலாம். அது­போல நிதிச் சேவைகள், தகவல் தொழில்­நுட்பம் மற்றும் ‘டிஜிட்டல்’ பணப் பரி­வர்த்­தனை சார்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்கு, பஹ்­ரைனில், மிகச் சிறந்த வர்த்­தக வாய்ப்­புகள் காத்­தி­ருக்­கின்­றன. இந்­தி­யா­வுடன், நெருக்­க­மான பொரு­ளா­தார உறவை ஏற்­ப­டுத்திக் கொள்ள, பஹ்ரைன் ஆர்­வ­மாக உள்­ளது. ஏரா­ள­மான அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, பஹ்ரைன் அரசு நிதி­யு­தவி அளிக்­கி­றது. இந்த வாய்ப்பை, இந்­திய பொறி­யியல் நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். எண்ணெய் மற்றும் எரி­வாயு நிறு­வ­னங்­களை மேம்­ப­டுத்­து­வது, விமான நிலை­யங்­களின் விரி­வாக்கம், புதிய ரயில்வே திட்­டங்கள் ஆகி­ய­வற்றில், இந்­திய நிறு­வ­னங்கள் பங்­கேற்­கலாம்.
வளை­குடா கூட்­டு­றவு குழுவைச் சேர்ந்த ஆறு நாடு­க­ளுக்கு, நுழை­வா­யி­லாக பஹ்ரைன் உள்­ளது. மத்­திய கிழக்கு நாடு­களின் மத்­தியில் அமைந்­தி­ருப்­பது, பஹ்­ரை­னுக்கு கூடுதல் சிறப்பு. அதனால், 30 நிமிட பய­ணத்தில், 25 கி.மீ., துாரம் உள்ள சவூதி அரே­பி­யா­விற்கு செல்­லலாம். ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், பஹ்­ரைனை மைய­மாக வைத்து, சவூதி அரே­பியா மற்றும் வளை­குடா கூட்­டு­றவு நாடு­களில் வர்த்­தகம் புரி­கின்­றன.
முழு ஒத்­து­ழைப்புகுறைந்த ஊதி­யத்தில் கிடைக்கும் தொழி­லா­ளர்கள், பல­த­ரப்­பட்ட தொழில்­களை மேற்­கொள்­வ­தற்­கான சுதந்­திரம், தாரா­ள­ம­ய­மாக்கல் கொள்கை போன்­றவை, இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு, சாத­க­மான வர்த்­தக சூழலை வழங்கும் வகையில் உள்­ளன. அதிக வருவாய் உள்ள தனிப்­பட்ட நபர்கள், நிதி நிறு­வ­னங்கள், சிறிய, பெரிய அள­வி­லான முத­லீட்டு நிறு­வ­னங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வன முத­லீட்­டா­ளர்கள், பஹ்­ரைனில் வர்த்­தகம் மேற்­கொள்ள, அரசு முழு ஒத்­து­ழைப்பு அளிக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)