பஹ்ரைன் நாட்டில் முத­லீடு செய்ய இந்­திய தொழி­ல­தி­பர்­க­ளுக்கு அழைப்புபஹ்ரைன் நாட்டில் முத­லீடு செய்ய இந்­திய தொழி­ல­தி­பர்­க­ளுக்கு அழைப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
காப்பீடு பெறுவோர் எண்ணிக்கை கிடுகிடு...: சென்னை வெள்ள பாதிப்பு எதிரொலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2016
10:54

சென்னையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் எதிரொலியாக, தங்களின் உடைமைகளை பாதுகாப்பதற்காக, காப்பீடு திட்டத்தில் சேருவோரின் எண்ணிக்கை, 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
சென்னையில், 2015 டிசம்பரில், 100 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, பலத்த மழை பெய்து, நகரமே வெள்ளக்காடானது; ஆயிரக் கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மக்கள் இழந்தனர். சொந்த ஊரிலேயே அகதிகளை போல, வீடு களை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களில், வெள்ள நீர் புகுந்ததால் உபரணங்கள் முற்றிலும் செயலிழந்தன.

உற்பத்தி பாதிப்பு
நாட்டின் முக்கிய வாகன உற்பத்தி மையமான சென்னையில், பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தயாரான கார்கள், வெளியூருக்கு போக முடியாமல் தேங்கி நின்றன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணி கள், முற்றிலும் செயலிழந்தன. சென்னை நகரமே ஒரு வார காலத்திற்கு ஸ்தம்பித்தது. சென்னையில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பை விட பல மடங்கு இழப்பை, வெள்ளம் நிகழ்த் தியது. அப்போது, தங்கள் உடைமை களை இழந்த பலரும், அவற்றை திரும்பப் பெற முடியாமல், வாழ்க் கையை தொலைத்தனர். அரசு கொடுத்த, 5,000 ரூபாய்; 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம், 'யானை பசிக்கு சோளப் பொரியாய்' காணாமல் போனது.

ரூ.15 ஆயிரம் கோடி
சென்னையில், வெள்ளத்தால், 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்புஏற்பட்டதாக, 'அசோசெம்' என்ற, தேசிய அளவிலான தொழில் வர்த்தக அமைப்பு தெரிவித்தது. அதில், 40 சதவீதத்திற்கும் குறைவாகவே, இழப்பீடு தொடர் பான கோரிக்கை கள், காப்பீடு நிறுவனங்களுக்கு வந்தன. மொத்தம், 52 ஆயிரம் பேரிடம் இருந்து, 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே இழப்பீட்டிற்கான கோரிக்கை வந்தது. மீதம், 50 சதவீதத்திற்கும் அதிக மான இழப்பு, காப்பீடு செய்யப்படாததால், வெள்ளத் தில் கரைந்து போனது. இச்சம்பவத்திற்கு பின், காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து, தனியார் காப்பீட்டு நிறுவனத்தை சேர்ந்த, கடந்த ஆண்டு அதிக அளவில் வாகன இழப்பீடு வழங்கிய ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், 'சென்னை வெள்ளத்திற்கு பின், காப்பீடு பெறுவோரின் எண்ணிக்கை, 25 சதவீதத் திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதுபோல், வாகன காப்பீடும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், டிசம்பருக்கு பிறகு, 100 சதவீதத்திற்கும் அதிகமாக பிரீமியம் தொகை வருவாய்விபத்து காப்பீடு மட்டும் எடுத்து வந்த நிலை மாறி, அனைத்து விதமான சேதாரங்களுக்கு மான, ஒட்டுமொத்த காப்பீடு எடுப்பது உயர்ந்துள்ளது. அத்துடன், தீ விபத்திற்கு மட்டும் காப்பீடு செய்தது போய், உள்ளே இருக்கும் பொருட் களுக்கும் சேர்த்து காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன அதிகாரி கள் கூறும் போது, 'சிறு, குறு, தொழில் நிறுவனத்தினர், ஏற்கனவே காப்பீடு செய்திருந்தாலும், அதை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நிகழும் போது, கருவிகள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீட்டை, மாற்றித் தரக் கோருவது அதிகரித்து உள்ளது' என்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)