பதிவு செய்த நாள்
14 அக்2016
12:13
பெங்களூரு: கோடை துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையிலும், தாகத்தை தணிக்கும் இளநீர் விலை அதிகரித்துள்ளது. பெங்களூரு மக்கள் ஆண்டு முழுவதும் விரும்பி பருகும் இளநீர், இந்த ஆண்டு குளிர் காலத்திலேயே விலை ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த மாதம் காவிரி போராட்டம், மாண்டியா, மத்துார், மலவள்ளி தாலுகாவில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பெங்களூருக்கு இளநீர் வரத்து குறைந்தது. இதனால் இளநீர் விலை அதிகரிக்க துவங்கியது.செப்டம்பர் வரை, தென் கர்நாடகா பகுதிகளிலிருந்து தினமும், 90 முதல், 100 லாரிகளில் இளநீர் காய்கள், பெங்களூரு வந்து கொண்டிருந்தன. தற்போது பாதியாக குறைந்துள்ளது.இளநீர் வியாபாரிகள் கூறியதாவது: உற்பத்தியாளர்களிடமிருந்து இளநீர் காய் ஒன்றை, 15 ரூபாய் வீதம் வாங்கி வந்தோம். தற்போது விளைச்சல் குறைவினால், இளநீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக, 20 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், 30 ரூபாய்க்கு விற்கிறோம்.இதே நிலை நீடிக்குமானால் வரும் மாதத்தில், 40 ரூபாயாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.தென்னை விவசாயிகள் தகவலின்படி, தென் கர்நாடகா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியே இளநீர் உற்பத்தி பதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக கோடையில் தான், 30 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விலை இருக்கும். குளிர் காலத்தில், 25 ரூபாய் வரை விற்கப்படும். இந்த ஆண்டு மழை காலத்திலேயே, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எவ்வளவு விலை ஏற்றினாலும் வாடிக்கையாளர்கள் வாங்க தயாராக உள்ளனர்.தேக ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் விலை உயர்வை பற்றி கவலைப்படுவதில்லை. இளநீருக்கு, 35 ரூபாயா என்று கருதுபவர்கள் மட்டுமே குளிர்பானங்களை நாடுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|