தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... இந்தியாவில் குளோபல் ஸ்டோர் துவக்குகிறது அமேசான் இந்தியாவில் குளோபல் ஸ்டோர் துவக்குகிறது அமேசான் ...
குளிர் காலத்திலும் இளநீர் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2016
12:13

பெங்களூரு: கோடை துவங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையிலும், தாகத்தை தணிக்கும் இளநீர் விலை அதிகரித்துள்ளது. பெங்களூரு மக்கள் ஆண்டு முழுவதும் விரும்பி பருகும் இளநீர், இந்த ஆண்டு குளிர் காலத்திலேயே விலை ஏற்றத்தை கண்டுள்ளது. கடந்த மாதம் காவிரி போராட்டம், மாண்டியா, மத்துார், மலவள்ளி தாலுகாவில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பெங்களூருக்கு இளநீர் வரத்து குறைந்தது. இதனால் இளநீர் விலை அதிகரிக்க துவங்கியது.செப்டம்பர் வரை, தென் கர்நாடகா பகுதிகளிலிருந்து தினமும், 90 முதல், 100 லாரிகளில் இளநீர் காய்கள், பெங்களூரு வந்து கொண்டிருந்தன. தற்போது பாதியாக குறைந்துள்ளது.இளநீர் வியாபாரிகள் கூறியதாவது: உற்பத்தியாளர்களிடமிருந்து இளநீர் காய் ஒன்றை, 15 ரூபாய் வீதம் வாங்கி வந்தோம். தற்போது விளைச்சல் குறைவினால், இளநீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக, 20 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், 30 ரூபாய்க்கு விற்கிறோம்.இதே நிலை நீடிக்குமானால் வரும் மாதத்தில், 40 ரூபாயாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.தென்னை விவசாயிகள் தகவலின்படி, தென் கர்நாடகா பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியே இளநீர் உற்பத்தி பதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக கோடையில் தான், 30 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விலை இருக்கும். குளிர் காலத்தில், 25 ரூபாய் வரை விற்கப்படும். இந்த ஆண்டு மழை காலத்திலேயே, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எவ்வளவு விலை ஏற்றினாலும் வாடிக்கையாளர்கள் வாங்க தயாராக உள்ளனர்.தேக ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால் விலை உயர்வை பற்றி கவலைப்படுவதில்லை. இளநீருக்கு, 35 ரூபாயா என்று கருதுபவர்கள் மட்டுமே குளிர்பானங்களை நாடுகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)