பதிவு செய்த நாள்
14 அக்2016
12:58
பெங்களூரு : ஆன்லைன் வர்த்தக போட்டியை சமாளிப்பதற்காக அமேசான் இந்தியா நிறுவனம், குளோபல் ஸ்டோரை துவக்க உள்ளது. இதன் மூலம், அமெரிக்க கம்பெனிகளின் பொருட்களையும் இந்திய வாடிக்கையாளர்கள் அமேசானில் வாங்க முடியும்.
நெட் பேங்கிங் மூலம் இந்திய ரூபாய் மதிப்பிலேயே வாடிக்கையாளர்கள் பொருளுக்கான பணத்தை செலுத்தலாம். அமேசான் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள், உள்ளூர் அமேசான் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் விநியோகம் செய்யப்படும். பொருளின் விலையிலேயே இறக்குமதி வரி உள்ளிட்ட இதர வரிகள் சேர்த்து வசூலிக்கப்படும். இந்த குளோபல் ஸ்டோர் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களுக்கு கேஸ் ஆன் டெலிவரி வசதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியாவின் பண்டிகை கால 2வது சலுகை விற்பனை துவங்கும் அக்டோபர் 17 முதல் 20 ம் தேதிக்கு முன்னதாக இந்த குளோபல் ஸ்டோர் துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவைச் சேர்ந்த பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் விற்பனையாகும் கோடிக்கணக்கான பொருட்களையும் விற்பனை செய்ய உள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. இந்த குளோபல் ஸ்டோர் மூலம் 85 மில்லியன் பொருட்களை அமேசான் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|