பதிவு செய்த நாள்
14 அக்2016
15:56
புதுடில்லி : விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலைக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எச்சரித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு விற்றால், அபராதம், சிறை போன்ற தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது எம்ஆர்பி விலையை விட கூடுதலாகவே குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இது சட்ட விரோதமாகும். இவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் 10 முதல் 20 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. பல குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களில் விலை கைகளில் எழுதப்பட்டு விற்கப்படுகிறது என்றார்.
இன்று 47வது உலக தர நிர்ணய தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான் இதனை தெரிவித்துள்ளார். குடிநீர் பாட்டில்களுக்கு ஐஎஸ்ஐ தர சான்று வழங்க வழிவகை செய்யப்படும் எனவும், வாடிக்கையாளர்களிடம் அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் பேசி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|