பதிவு செய்த நாள்
14 அக்2016
16:14
மும்பை : நேற்றைய கடும் சரிவிற்கு பிறகு இன்று நம்பிக்கையுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 30.49 புள்ளிகள் உயர்ந்து 27,673.60 புள்ளிகளாகவும், நிப்டி 10.05 புள்ளிகள் உயர்ந்து 8583.40 புள்ளிகளாகவும் உள்ளன.
இன்போசிஸ், ஹச்டிஎப்சி, லுபின், விப்ரோ போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இருப்பினும் கெயில், ரிலையன்ஸ், டிசிஎஸ் போன்ற நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. இன்போசிஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட 2வது காலாண்டு நிகர லாப கணக்கில் அந்நிறுவனத்தின் வருமானம் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்த போதிலும், அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தே காணப்பட்டன. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்த சூழல் காரணமாக இந்திய மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளும் தங்களின் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள கவடுமையாக போராடி வருகின்றன. இதன் காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகளில் தடமாற்றமான சூழல் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|