பதிவு செய்த நாள்
16 அக்2016
05:32
புதுடில்லி:கடந்த செப்., மாதத்தில், இந்தியாவுக்கு, ‘இ – விசா’ மூலம் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 68 ஆயிரத்து, 800 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 31 ஆயிரத்து, 729 ஆக குறைந்திருந்தது.
சுற்றுலா துறையை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதனால் நடப்பு ஜன., – செப்., வரையிலான காலத்தில், இ – விசா மூலம், 6.75 லட்சம் பேர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2.01 லட்சமாக குறைந்திருந்தது.
வெளிநாட்டு பயணிகளை ஈர்த்ததில், 51.71 சதவீத பங்குடன், டில்லி விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, மும்பை, 21.06 சதவீதம்; பெங்களூரு, 6.44 சதவீதம்; சென்னை விமான நிலையம், 6.27 சதவீதம் என்றளவில் உள்ளன. அதிக சுற்றுலா பயணிகள் வந்ததில், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|