சரக்கு போக்குவரத்து வளர்ச்சி குறையும்: ‘இக்ரா’சரக்கு போக்குவரத்து வளர்ச்சி குறையும்: ‘இக்ரா’ ... ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் ...
புதிய வளர்ச்சி வங்கி மதிப்பீடு:இந்தியா சரியான பாதையில் செல்கிறது:பொருளாதாரம் ‘திடீர்’ எழுச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2016
05:35

கோவா:‘‘இந்தியா, மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், நாட்டின் பொருளாதாரம், அடுத்த, 12 – 18 மாதங்களில், திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது,’’ என, புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர், கே.வி.காமத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது:நாட்டின் முன்­னேற்­றத்தை கருத்தில் கொண்டு, மத்­திய அரசு எடுத்து வரும் பல்­வேறு நட­வ­டிக்­கைகள், நன்கு உள்­ளன; எல்லாம் நல்­ல­ப­டி­யாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. மத்­திய அரசின் செயல்­பா­டுகள், இதே வேகத்தில் தொடர வேண்டும். இதன் மூலம், அடுத்த, 12 – 18 மாதங்­களில், இந்­திய பொரு­ளா­தாரம், திடீ­ரென மிகப்­பெ­ரிய வளர்ச்சி காண்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளது.
இதற்கு, பண­வீக்­கத்தை கட்­டுக்குள் கொண்டு வந்­தது உட்­பட, மத்­திய அரசு எடுத்த பல்­வேறு நடவ­டிக்­கைகள் காரணம் எனலாம்.பண­வீக்கம் சரி­வ­டைந்­ததால், வங்கி வட்டி விகிதம் மிகப்­பெ­ரிய அளவில் குறைந்­துள்­ளது. அடுத்த ஆண்டு, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்­ப­டுத்த, மத்­திய அரசு தீவிர முயற்சி மேற்­கொண்டு வரு­கி­றது. இந்த வரி­வி­திப்பு அம­லானால், பல­முனை வரிப் பிரச்னை முடிவிற்கு வரும்.
மத்­திய அரசு, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர அறி­மு­கப்­ப­டுத்­திய, ‘வரு­மான அறி­விப்பு திட்டம்’ குறிப்­பி­டத்­தக்க வரு­வாயை அளித்­துள்­ளது. அது போல, உணவுப் பொருட்­களை நிர்­வ­கிப்­பது தொடர்­பான சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களும், சிறப்­பான பலன்­களை அளித்து வருகின்­றன. பொதுத் துறை வங்­கி­களின் இடர்­பாட்டுக் கடன்­களால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் என, கூற முடி­யாது. மத்­திய அரசு, வரி வசூல் உள்­ளிட்ட பல்­வேறு செயல்­பா­டு­களில், நவீன தொழில்­நுட்­பங்­களை புகுத்த வேண்டும். அது, நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு துணை புரியும். புதிய வளர்ச்சி வங்கி, அடுத்த ஆண்டு, ரூபாய் அடிப்­ப­டை­யி­லான, ‘மசாலா பாண்ட்’ கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.
முதல் தலைவர்:பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகியவை, ‘பிரிக்ஸ்’ நாடுகள் என, அழைக்கப்படுகின்றன. இந்நாடுகள், அவற்றின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, என்.டி.பி., எனப்படும், புதிய வளர்ச்சி வங்கியை உருவாக்கி உள்ளன. சீனாவின், ஷாங்காய் நகரில் அமைந்துள்ள, இவ்வங்கியின் முதல் தலைவராக, இந்தியரான, கே.வி.காமத், 2015ல் நியமிக்கப்பட்டார்.இவர் ஏற்கனவே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)