பதிவு செய்த நாள்
18 அக்2016
06:06
புதுடில்லி : ஐரோப்பாவைச் சேர்ந்த, பி.பி. பிஎல்சி., நிறுவனம், இந்தியாவில், பெட்ரோல் பங்க் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில், பி.பி. பிஎல்சி., மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், இந்தியாவில், 3,500 பெட்ரோல் பங்க்குகளை அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில், இந்தியாவில், விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்வதற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தியாவில், பெட்ரோல், டீசல் விற்பனைக்காக, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|