பதிவு செய்த நாள்
18 அக்2016
06:07
புதுடில்லி : கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பாண்டில், 23 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்., – செப்., வரை, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 13 ஆயிரத்து, 05 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், கைவினைப் பொருட்களுக்கு, அதிக தேவை காணப்படுகிறது. இதையடுத்து, நடப்பு முழு நிதியாண்டில், ஏற்றுமதி, 10 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்படுகிறது.
இது குறித்து, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் செயல் இயக்குனர், ராகேஷ் குமார் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும், உலகளவில், 30 – 35 கண்காட்சிகளில், இந்தியா பங்கேற்கிறது. இதனால், விற்பனையும் அதிகரிக்கிறது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|