பதிவு செய்த நாள்
18 அக்2016
06:08
புதுடில்லி : ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின், புதிய பிரீமியம் வசூல், 16 ஆயிரத்து, 767 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இந்தியாவில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், செப்., வரையிலான காலத்தில், புதிய பிரீமியம் மூலம், 16 ஆயிரத்து, 767 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 11 ஆயிரத்து, 117 கோடி ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி.,யின் பிரீமியம் வசூல், 65.3 சதவீதம் உயர்ந்து, 6,724.88 கோடி ரூபாயில் இருந்து, 11 ஆயிரத்து, 117.48 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமிய வசூல், 5,649.92 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதில், எச்.டி.எப்.சி., ஸ்டேண்டர்டு லைப், 897.53 கோடி ரூபாய்; ஐ.சி.ஐ.சி.ஐ., புரொடென்ஷியல், 648.93 கோடி ரூபாய் பிரீமியம் வசூலித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|