பதிவு செய்த நாள்
18 அக்2016
06:08
புதுடில்லி : இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘கெய்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவில் இருந்து, பட்டாசு, பொம்மை, விளக்கு, மொபைல் போன், மின்னணு சாதனங்கள் உட்பட, ஏராளமான பொருட்கள் இறக்குமதியாகின்றன.மலிவு விலையில் கிடைக்கும் சீனப் பொருட்களால், உள்நாட்டு தொழில் துறை பாதிக்கப்படுகிறது.
இது குறித்து, சமூக வலைதளங்களில், ‘சீனப் பொருட்களை புறக்கணிப்போம்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; வேகமாக பரவி வரும் இப்பிரசாரம், நல்ல பலனை அளித்துள்ளது. மக்கள் சீனப் பட்டாசுகளை புறக்கணிக்க துவங்கியுள்ளனர். அதனால், இந்தாண்டு பண்டிகை காலத்தில், சீனப் பொருட்களின் விற்பனை, 30 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான சீனப் பொருட்களின் இறக்குமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|