பதிவு செய்த நாள்
18 அக்2016
06:09
மும்பை : நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான முதல் அரையாண்டில், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் மூலம், 23,901 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1,502 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது.
நிறுவனங்கள், அவற்றின் செயல்பாட்டு மூலதனத் தேவைகள், விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை சமாளிக்க, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன. இந்த வகையில், மதிப்பீட்டு காலத்தில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன், கொசமட்டம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள், இருமுறை பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு உள்ளன.
இதுதவிர, இந்தியா புல்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ், எடல்வைஸ் ஹவுசிங் பைனான்ஸ், முத்துாட் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|