அசோக் லேலாண்டு நிறு­வ­னத்தின்  எலக்ட்ரிக் பஸ் அறி­முகம்அசோக் லேலாண்டு நிறு­வ­னத்தின் எலக்ட்ரிக் பஸ் அறி­முகம் ... அடுத்த 3 மாதங்­களில்... பண்­டிகை கால விற்­பனை 40 சத­வீதம் உயர வாய்ப்பு அடுத்த 3 மாதங்­களில்... பண்­டிகை கால விற்­பனை 40 சத­வீதம் உயர வாய்ப்பு ...
துறை­முகம் அருகே சரக்கு கையாளும் மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2016
06:11

புது­டில்லி : ‘‘ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, துறை­மு­கங்கள் அருகே, சரக்­கு­களை கையாளும் மையங்கள் அமைக்­கப்­படும்,’’ என, மத்திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: விமான நிலை­யங்கள், துறை­மு­கங்கள் ஆகி­ய­வற்றில், ஏற்­று­மதி, இறக்­கு­மதி நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக நடை­பெற, சீரான சரக்கு போக்­கு­வ­ரத்து வசதி அவ­சியம்.இதை கருத்தில் கொண்டு, துறை­மு­கங்கள் அருகே, சரக்­கு­களை கையாள்­வது, வினி­யோ­கிப்­பது உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை மேற்­கொள்ளும் மையங்கள், தனி­யா­ருடன் இணைந்து அமைக்­கப்­படும்.சரக்கு போக்­கு­வ­ரத்தில் உள்ள சங்­க­டங்­களை குறைக்க, மத்­திய அரசு முன்­னு­ரிமை அளித்து, நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. அதன்­படி, முக்­கிய துறை­மு­கங்­களில், மின்னணு தகவல் பரி­மாற்ற வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­படும்.
இதன் மூலம் சரக்கு போக்கு­வ­ரத்து விப­ரங்­களை உட­னுக்­குடன் தெரிந்து, அதற்­கேற்ற செயல் திட்­டத்தை, ஏற்­று­ம­தி­யா­ளர்கள் வகுத்துக் கொள்ள முடியும். ஏற்­று­ம­தி­யா­ளர்­களை ஊக்­கு­விக்கும் நோக்கில், சரக்கு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­களை குறைக்­கு­மாறு, ரயில்வே அமைச்­ச­கத்­திடம் வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது.
கடந்த ஆண்டு துவக்­கத்தில், வெளி­நாட்டு வர்த்­தக கொள்கை அறி­விக்­கப்­பட்­டது. அப்­போது, ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் நம்­பிக்­கையை பெற, அக்­கொள்­கையை மத்­திய அரசு நிலையாக கடை­பி­டிக்கும், நடுத்­தர கால அளவில் தான், கொள்கை தொடர்­பான மறு­ஆய்வு மேற்­கொள்­ளப்­படும் என, தெரி­வித்­தி­ருந்தேன். அதன்­படி, தற்­போது, ஏற்­று­மதி வர்த்­தக கொள்கை தொடர்­பான மறு­ஆய்வு நட­வ­டிக்­கைகள் துவங்­கி­யுள்­ளன.
மத்­திய அரசு, இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்க, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. இருந்த போதிலும், புதுப் புது பிரச்­னைகள் தலை துாக்­கு­கின்றன; அவற்­றுக்கு நிரந்­தர தீர்வு காணும் முயற்­சியில், மத்திய அரசு ஈடு­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)