துறை­முகம் அருகே சரக்கு கையாளும் மையம்துறை­முகம் அருகே சரக்கு கையாளும் மையம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.76 ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.76 ...
அடுத்த 3 மாதங்­களில்... பண்­டிகை கால விற்­பனை 40 சத­வீதம் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2016
06:11

புது­டில்லி : பண்­டிகை காலம் துவங்­கி­யுள்­ளதை அடுத்து, அடுத்த மூன்று மாதங்­களில், ஆடை, மொபைல் போன், வாகனம் உள்­ளிட்­ட­வற்றின் விற்­பனை, வழக்­கத்தை விட அதி­க­மாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது தொடர்­பாக, இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்­பான, ‘அசோசெம்’, டில்லி, மும்பை, சென்னை உள்­ளிட்ட எட்டு நக­ரங்­களில், 3,500க்கும் அதி­க­மான நுகர்­வோ­ரிடம் ஆய்வு மேற்­கொண்­டது. அத­ன­டிப்­ப­டையில், ‘அடுத்த மூன்று மாதங்­களில், பல்­வேறு பொருட்­களை வாங்­கு­வது தொடர்­பான நுகர்­வோரின் தேவை, 40 சத­வீதம் அதி­க­ரிக்கும்’ என, அசோசெம் மதிப்­பிட்டு உள்­ளது. நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, பெருகி வரும் வேலை­வாய்ப்­புகள், குறைந்து வரும் வட்டி விகிதம் போன்­ற­வற்றால், நுகர்­வோரின் தேவை அதி­க­ரித்து, பொருட்­களின் விற்­பனை, 40 சத­வீதம் உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­தாண்டு, பரு­வ­மழை நன்கு உள்­ளதால், கிரா­மப்­பு­றங்­களில், பண்­டிகை கால பொருட்­க­ளுக்கு தேவை அதிகம் இருக்கும். ஏற்­க­னவே, ஆடைகள், இரு­சக்­கர வாக­னங்கள், நகைகள், மொபைல் போன்கள் ஆகி­ய­வற்றின் விற்­பனை சூடு பிடித்­துள்­ளது; பய­ணிகள் கார் விற்­ப­னையும், சிறப்­பான அளவில் உயர்ந்து வரு­கி­றது.
பண்­டிகை காலத்­தை­யொட்டி, கிழக்கு மற்றும் மேற்கு மாநி­லங்­களில், பல்­வேறு பொருட்கள் விறு­வி­றுப்­பாக விற்­ப­னை­யாகி வரு­கின்­றன. மேற்­கு­வங்­கத்தில், துர்கா பூஜையும், மஹா­ராஷ்­டிரா, குஜராத் மாநி­லங்­களில், நவராத்­திரி விழாவும், பொருட்கள் விற்பனையை உயர்த்தி உள்­ளன. டில்லி உள்­ளிட்ட வட இந்­திய நக­ரங்­களில், தீபா­வளி பண்­டி­கை­யை­யொட்டி, அடுத்த சில நாட்­களில், பொருட்கள் விற்­பனை சூடு பிடிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
அடுத்த மூன்று மாதங்­களில், நுகர்வோர், மளிகை சாமான்­க­ளுக்கு கூடு­த­லாக, 20 சத­வீதம் செலவு செய்வர். இந்த கூடுதல் செலவு, பட்ஜெட் ஆடை­க­ளுக்கு, 52 சத­வீ­த­மா­கவும், அலங்­கார பொருட்­க­ளுக்கு, 32 சத­வீ­த­மா­கவும் இருக்கும் என, அசோசெம் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. ஆண்­களை விட, பெண்கள் ஆடை­க­ளுக்கு அதிகம் செல­வி­டுவர். நுகர்வோர், 15,000 – 35,000 ரூபாய் வரை­யி­லான, மொபைல் போன்­களை வாங்க ஆர்வம் காட்­டுவர்; கடந்த ஆறு மாதங்­க­ளாக, 10,000 – 15,000 ரூபாய் உள்ள மொபைல் போன்­க­ளுக்கு, தேவை அதிகம் இருந்­தது.
மொபைல் போன்கள் மற்றும் இதர மின்­னணு சாத­னங்­களை வாங்கும் போது, ‘பிராண்டு’ பொருட்­க­ளையும், அவற்றின் மதிப்­பையும் ஆராய்ந்த பின்னே, வாங்­கு­வது குறித்து, நுகர்வோர் முடிவு செய்வர். வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், அதி­க­ளவில் தள்­ளு­படி சலு­கை­களை வழங்­கு­கின்­றன. அதனால், நக­ரங்­களில், வீட்டில் இருந்­த­ப­டியே, வலை­த­ளங்கள் மூலம் பொருட்கள் வாங்­கு­வது அதிகரிக்கும் என, அசோசெம் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)