ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.76ரூபாயின் மதிப்பு உயர்வு- ரூ.66.76 ... இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! இந்தியாவில் சீன தயாரிப்பு பொருட்களின் விற்பனை சரிவு! ...
தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஏறுமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2016
10:51

தமிழகத்தில், பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியை நெருங்குகிறது. தற்போது, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல புதிய சலுகைகளை, பி.எஸ்.என்.எல்., வழங்கி வருகிறது. அத்துடன், மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக வழங்கி வந்த, 'ரோமிங்' வசதியை, மேலும், ஓராண்டிற்கு நீட்டித்துள்ளது. வெளிநாடு சென்றாலும், இலவச ரோமிங் வழங்குகிறது. இதனால், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது குறித்து, தமிழக தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு ஜூலையில், நாட்டிலேயே அதிகளவில், புதிய மொபைல் இணைப்புகளை, பி.எஸ்.என்.எல்., வழங்கியது. அப்போது, தமிழக தொலைத்தொடர்பு வட்டத்தில், 1.76 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். பின், ஆகஸ்டில், 2.33 லட்சம்; செப்டம்பரில், 1.95 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன. தற்போது, சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தை சேர்க்காமல், தமிழக தொலைத்தொடர்பு வட்டத்தில் மட்டும், 74.4 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலைத்தொடர்பு வட்ட அதிகாரிகள் கூறியதாவது: எங்கள் வட்டத்தில், பல இடங்களில், 'மெகா மேளா' நடத்தினோம். ஜூலையில், 16 ஆயிரத்து 200; ஆகஸ்டில், 22 ஆயிரத்து, 311; செப்டம்பரில், 15 ஆயிரம் புதிய மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தில் மட்டும், மொத்தம், 15 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இரு வட்டங்களையும் சேர்த்து, தற்போது, 90 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிதியாண்டிற்குள், ஒரு கோடி வாடிக்கையாளர்களை தொட்டு விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)