பதிவு செய்த நாள்
18 அக்2016
18:03
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் அதிரடியாக ஒரேநாளில் 521 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது, ஜிஎஸ்டி தொடர்பாக ஜிஎஸ்டி குழு எடுத்துள்ள சில முக்கிய முடிவுகள், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(அக்.,18-ம் தேதி) அதிக எழுச்சியுடன் காணப்பட்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 55 புள்ளிகள் உயர்வுடனும் ஆரம்பமான நிலையில் தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும்போதும் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 520.91 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்து 28,064.39-ஆகவும், நிப்டி 157.50 புள்ளிகள் உயர்ந்து 8,677.90-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 28 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 2 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி., எஸ்பிஐ., உள்ளிட்ட வங்கி தொடர்பான பங்குகள் அதிகளவு ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|