பதிவு செய்த நாள்
18 அக்2016
23:33
பெங்களூரு : டியாஜியோ நிறுவனம், கர்நாடக மாநிலம், பெங்களூரில், வணிக சேவை மையத்தை துவக்க உள்ளது.
‘ஸ்பிரிட்’ விற்பனையில் முன்னணியில் உள்ள டியாஜியோ நிறுவனம், வணிக சேவை துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, கர்நாடக மாநிலம், பெங்களூரில், வணிக சேவை மையத்தை துவக்க உள்ளது. அங்கு, கடன் வழங்குதல், நிறுவனங்களுக்கு கணக்கு பராமரிப்பு பணிக்கு உதவுதல் போன்ற சேவைகளை வழங்க உள்ளது. இந்த மையம், 2017 அக்., மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம், 1,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் சேவை மையம், நிறுவனங்களுக்கு, நிதி தொடர்பான தீர்வுகளை வழங்கும். விரைவில் மையம் செயல்பட ஆரம்பிக்கும். தற்போது, 100 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் போது, 1,000 பேருக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|