பதிவு செய்த நாள்
18 அக்2016
23:35
புதுடில்லி : பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்வதற்கு வசதியாக, மும்பை பங்குச்சந்தை, ‘பி.எஸ்.இ – பாண்ட்’ என்ற வலைதள பிரிவை, ஜூலை, 1ல் துவக்கியது.
அதுமுதல், அக்., 17 வரையிலான காலத்தில், 35 நிறுவனங்கள், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 77,955 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. நான்கு மாதங்களுக்கு உள்ளாக, இந்த அளவிற்கு நிதி திரட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக்சிஸ் பேங்க், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 5,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், 4,335 கோடி ரூபாய் திரட்டியது. எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ், ‘நபார்ட்’ வங்கி ஆகியவை, தலா, 500 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இந்த கடன் பத்திரங்களில், வங்கிகள், பரஸ்பர நிதியங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவை முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|