பதிவு செய்த நாள்
18 அக்2016
23:37
புதுடில்லி : ‘பணவீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, மீண்டும் குறைக்க வாய்ப்பு உள்ளது’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனம், பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்களை தொகுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்: சில்லரை பணவீக்கம் குறைந்ததால், ரிசர்வ் வங்கி, அக்., 4ல், வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது. இது, 2010 நவம்பருக்கு பின், காணப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.
இந்நிலையில், பரவலான பருவமழை, உணவுப் பொருட்கள் விலை குறைவு போன்றவற்றால், செப்டம்பரில், சில்லரை பணவீக்கம், 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.31 சதவீதமாக குறைந்துள்ளது. அதனடிப்படையில், 2017 ஜன., – மார்ச் வரையிலான காலத்தில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.80 சதவீதம் என்ற அளவிற்கு இருக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். இது, ரிசர்வ் வங்கியின் இலக்கு அளவான, 5 சதவீதத்தை விட குறைவாகும்.அதனால், ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒருமுறை வட்டியை குறைக்க வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு குறைத்தால், ரெப்போ வட்டி விகிதம், 6 சதவீதமாக இருக்கும். ஆகவே, இந்த வட்டி குறைப்பு நடவடிக்கைக்கு பின், அடுத்த ஓராண்டிற்கு, ரிசர்வ் வங்கி, வட்டியை குறைக்க வாய்ப்பு இல்லை.ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், நடப்பு மற்றும் வரும் நிதியாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, முறையே, 7.7 சதவீதம் மற்றும் 7.8 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, சர்வதேச நிதியம், இரு நிதியாண்டுகளுக்கு நிர்ணயித்த தலா, 7.6 சதவீதத்தை விட அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|