பதிவு செய்த நாள்
19 அக்2016
23:53
புதுடில்லி : வாடகை கார்களால், ஆட்டோக்களில் பயணிப்போர் எண்ணிக்கை ஒருகட்டத்தில் குறைந்தது. இதனால், அவற்றின் விற்பனையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊபர், ஓலா நிறுவனங்கள், முக்கிய நகரங்களில், கார்களுடன், ஆட்டோக்களையும் வாடகைக்கு விடும் சேவையை துவக்கின. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், முதல் ஆறு மாத காலங்களில், ஆட்டோ விற்பனை, 13.4 சதவீதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, பஜாஜ் நிறுவனத்தின் ஆட்டோ விற்பனை, 27 சதவீதம் அதிகரித்து, 1.49 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, பஜான் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரி மகேஸ்வரி கூறியதாவது: சில மாநிலங்களில் புதிதாக வாகன, ‘பெர்மிட்’ வழங்கப்பட்டு உள்ளது. சில முக்கிய நகரங்களில், திறந்த நிலையில் உள்ள வாடகை வாகனங்களில் பயணிக்கவே, பெண்கள் விரும்புகின்றனர். இது போன்ற காரணங்களால், ஆட்டோ விற்பனை அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|