பதிவு செய்த நாள்
19 அக்2016
23:54
மும்பை : ‘குடிநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை, அவற்றில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்வோருக்கு அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்கும்’ என, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், சமீபத்தில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் மேற்கு பிரிவு, அறிக்கை ஒன்றை, அனைத்து ஓட்டல்களுக்கும் அனுப்பிஉள்ளது.
அதன் விபரம்: கடைகளில் தான், குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை, அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் விற்கக் கூடாது. இந்த விதிமுறை, ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளுக்கு பொருந்தாது. அதனால், அவை, கூடுதல் விலைக்கு குடிநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்கலாம்; அதை தடுக்க, சட்டம் ஏதும் இல்லை. அதே சமயம், ஓட்டல் ‘கவுண்டர்’களில், குடிநீர், குளிர்பானங்களை, அவற்றில் குறிப்பிட்டுள்ள விலையில் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|