பதிவு செய்த நாள்
19 அக்2016
23:54
மும்பை : நகை நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி, தங்க நகை சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றனவா என்பது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ விசாரணையை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக, ‘தனுஷ்க்’ பிராண்டில் தங்க நகைகளை விற்பனை செய்யும், ‘டைட்டன்’ நிறுவனம், கீதாஞ்சலி ஜெம்ஸ், பி.சி., ஜுவல்லர்ஸ் உட்பட, 12 நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்ட கையேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றை, செபி ஆராய்ந்து வருகிறது. ஒரு நிறுவனம், லாப நோக்கில், பரிசு அல்லது சலுகை திட்டங்களை அறிவித்து, மக்களிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டை திரட்டும்பட்சத்தில், அத்திட்டத்திற்கு, செபியிடம் அனுமதி பெற வேண்டும்.
புதிய நிறுவனங்கள் சட்டத்தின்படி, மக்களிடம் இருந்து திரட்டும் டிபாசிட், ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பில், 25 சதவீதத்திற்கு குறைவாகவும், திரட்டப்பட்ட முதலீடுகள் மீதான வருவாய், 12 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|