சூரிய மின் உற்­பத்­திக்கு சிறப்­பான எதிர்­காலம்சூரிய மின் உற்­பத்­திக்கு சிறப்­பான எதிர்­காலம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.68 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.68 ...
மத்­திய அரசின் சீர்­தி­ருத்த கொள்­கை­களால் சீரிய வளர்ச்­சியில் ஆயத்த ஆடைகள் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2016
23:56

புது­டில்லி : ‘மத்­திய அரசின் சீர்­தி­ருத்த கொள்கைகள், ஊக்­கு­விப்பு திட்­டங்கள் ஆகி­ய­வற்றால், ஆயத்த ஆடைகள் துறை, மேலும் சிறப்­பாக வளர்ச்சி காணும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரிசில்’ ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: இந்­திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், ஆயத்த ஆடை­களின் பங்­க­ளிப்பு, 60 – 65 சத­வீ­த­மாக உள்­ளது. உல­க­ளவில், ஆயத்த ஆடைகள் ஏற்­று­ம­தியில், சீனா முத­லி­டத்­திலும், அடுத்து, வங்­க­தேசம், வியட்நாம், ஜெர்­மனி, இத்­தாலி ஆகிய நாடு­களும் உள்­ளன; இந்தியா, ஆறா­வது இடத்தில் உள்­ளது. இதை கருத்தில் கொண்டு, இந்­திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்­சிக்கு, மத்­திய அரசு, பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.
குறிப்­பாக, ஐரோப்­பிய கூட்­ட­மைப்­புடன், தாராள வர்த்­தக ஒப்­பந்தம் செய்து கொள்­வதில் தீவி­ர­மாக உள்­ளது. இந்த ஒப்­பந்தம் கையெ­ழுத்­தானால், இந்­தியா, வரி­யின்றி, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஆயத்த ஆடை­களை, குறைந்த விலையில் ஏற்­று­மதி செய்ய முடியும். இதன் மூலம், வங்­க­தேசம், வியட்நாம், சீனா உள்­ளிட்ட நாடு­களின் போட்­டியை சமா­ளிக்­கலாம்.
சமீ­பத்தில், மத்­திய அரசு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையை ஊக்­கு­விக்க, 6,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான சலுகை திட்­டங்­களை அறிவித்தது. அதன்­படி, ஆடை ஏற்­று­மதி நிறு­வ­னங்கள், திரும்பப் பெறும் வரி, 7.2 சத­வீ­தத்தில் இருந்து, 10.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. ஜவுளித் துறை தொழி­லாளர் சட்ட விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்டு உள்­ளன. வரு­மா­ன­வரிச் சலு­கைக்­கான, பணி­யாளர் நிய­மன வரம்பு குறைக்­கப்­பட்டு உள்ளது. ஏ – டி.யு.எப்., திட்­டத்தின் கீழ், நுாற்­பா­லை­களை விட, கூடு­த­லான மூல­தன மானியம், நெசவு மற்றும் ஆயத்த ஆடைகள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது.
ஆயத்த ஆடை­க­ளுக்­கான, குறிப்­பிட்ட பருத்தி மற்றும் செயற்கை நுாலி­ழைக்­கான சுங்க வரி, 5 சத­வீ­தத்தில் இருந்து, 2.5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்ளது. அத்­துடன், நடப்பு நிதி­யாண்டில், ஒருங்­கி­ணைந்த ஜவுளி பூங்­காக்கள் அமைக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. இது போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம், இந்­திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை, மேலும் சிறப்­பாக வளர்ச்சி காணும்.
ஜவுளித் துறையில், சீனாவின் கவனம் குறைந்­துள்­ளதால், அதன் ஆடைகள் விலை அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை பயன்­ப­டுத்தி, சர்­வ­தேச ஆடைகள் சந்­தையில் தன் பங்­க­ளிப்பை, இந்­தியா அதி­க­ரித்துக் கொள்ள வாய்ப்பு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
‛ஆயத்த ஆடைகள் இறக்கும­தியில், அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களின் பங்களிப்பு, 60 சத­வீ­த­மாக உள்­ளது. மூன்­றா­வது இடத்தில் உள்ள ஜப்பான், 7 – 10 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளது.’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)