வரும் மாதங்­களில்...இந்­திய தயா­ரிப்பு துறை வளர்ச்சிஏற்ற, இறக்­க­மின்றி இருக்கும்வரும் மாதங்­களில்...இந்­திய தயா­ரிப்பு துறை வளர்ச்சிஏற்ற, இறக்­க­மின்றி ... ... ரூபாய் மதிப்பில் தொடரும் சரிவு : ரூ.66.92 ரூபாய் மதிப்பில் தொடரும் சரிவு : ரூ.66.92 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டெபிட் கார்டு’ பாது­காப்பு: என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
07:40

வங்­கி­களின், ‘டெபிட் கார்டு’ தக­வல்கள் திரு­டப்­பட்­டது தொடர்­பான செய்­திகள்,கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், கார்டு பயன்­பாட்டின் பாது­காப்பை உறுதி செய்யும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.
டெபிட் கார்டு, ‘பின்’ எண்ணை மாற்­று­மாறு கோரும் செய்தி, வங்­கி­யிடம் இருந்து உங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கலாம். எனில், உங்கள் டெபிட் கார்டு, ஏ.டி.எம்., பின் எண்ணை உட­ன­டி­யாக மாற்­று­வது நல்லது. இத்­த­கைய செய்­தியை, நீங்கள் பெற­வில்லை என்­றாலும் கூட, ஏ.டி.எம்., பின் எண்ணை மாற்­று­வது நல்­லது. ஏனெனில், டெபிட் கார்டு பயன்­பாட்­டிற்­ கான ரக­சிய பின் எண்ணை, குறைந்­தது, ஆண்டில் ஒரு முறை­யேனும் மாற்­று­வது நல்­லது என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்றனர். ஹேக்­கர்­களால் டெபிட் கார்டு தக­வல்கள் திரு­டப்­பட்டு, தவ­றாக பயன்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பை தவிர்க்க, இத்­த­கைய முன்­னெச்­ச­ரிக்கை அவ­சியம் என்­கின்­றனர்.
பாதிப்பு என்ன?
அண்­மையில், நாட்டின் முன்­னணி வங்­கி­களில் டெபிட் கார்ட் தொடர்­பான பாது­காப்பு மீறல் ஏற்­பட்­டுள்­ள­தாக செய்திகள் வெளி­யாகும் பின்­ன­ணியில், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. மர்ம மனி­தர்கள் வங்­கி­களின் டெபிட் கார்டு தக­வல்­களை திருடி பயன்­ப­டுத்தி உள்­ளனர் என்­பதும், சீனாவில், பணப் பரி­வர்த்­த­னைக்­காக இவை பயன்­ப­டுத்­தப்­பட்­டது பற்­றிய தக­வல்­களும் தெரிய வந்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யாகி உள்­ளன. குறிப்­பிட்ட வெளி­நாட்டு பணப் பரி­வர்த்­தனை சேவை நிறு­வ­னத்தின் கம்ப்­யூட்­டர்கள் மால்வேர் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னதே, இதற்கு காரணம் என்றும் கூறப்­ப­டு­கி­றது. மால்வேர் தாக்­கு­தலால் டெபிட் கார்டு தக­வல்கள் திரு­டப்­பட்­டுள்ள நிலையில், பல வங்­கிகள் தங்கள் வாடிக்­கை­யா­ளர்கள் சொந்த வங்கி, ஏ.டி.எம்., களை மட்­டுமே பயன்­ப­டுத்­து­மாறும் கேட்­டுக்­கொண்டு உள்­ளன.
பொது­வாக, வங்­கிகள் அளவில் பாது­காப்பு மீறல் நடை­பெற்று, அதனால் வாடிக்­கை­யாளர்­க­ளுக்கு இழப்பு ஏற்­பட்டால், அதற்கு வங்­கி­களே பொறுப்பு என, ரிசர்வ் வங்கி சுற்ற­றிக்கை மூலம் அண்­மையில் வலியுறுத்தி உள்­ளது. எனவே, ஏதேனும் இழப்பு ஏற்­பட்­டி­ருந்தால், உடனே வங்­கிக்கு அது­பற்றி தகவல் தெரி­விக்க வேண்டும். கார்­டு­தாரர் தவறால் இழப்பு ஏற்­பட்­டி­ருந்தால், அவரே அதற்கு பொறுப்பு. பொது­வாக, ஏ.டி.எம்., கார்டு பயன்­பாடு பாது­காப்­பா­னது என்றே வாடிக்­கை­யா­ளர்கள் கரு­து­கின்­றனர். ஆனால், பிரச்னை என்­ன­வென்றால், இந்­தி­யாவில் உள்ள, 70 சத­வீத ஏ.டி.எம்.,கள் காலா­வ­தி­யான இயங்கு­த­ளத்தை பயன்­ப­டுத்­து­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. இது, ஹேக்­கர்­களின் தாக்­குதல் அபா­யத்தை அதி­க­மாக்­கு­கி­றது. மேலும், பல்­வேறு வங்­கிகள் வெவ்­வேறு வெண்­டர்­களின், ஏ.டி.எம்., இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­வதால், இதில் ஒருங்­கி­ணைந்த தர நிர்­ணயம் மற்றும் தொழில்­நுட்ப வேறு­பா­டு­களும் இருப்­பது, மேலும் சிக்­கலை உண்­டாக்­கு­கி­றது. இத­னாலும் தாக்­குதல் நடக்கும் வாய்ப்பு இருப்­ப­தாக, ‘சைபர்’ பாது­காப்பு வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். தாக்­குதல் நடத்த பயன்­படுத்­தப்­பட்ட மால்வேர் கண்­ட­றி­யப்­பட்டு, அது தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும்.
ரக­சிய எண் மாற்றம்
பணப் பரி­வர்த்­த­னை பாதுகாப்பை உறுதி செய்­வது, வங்­கிகள் உள்­ளிட்ட அமைப்­பு­களின் பொறுப்பு என்­றாலும், வாடிக்­கை­யா­ளர்­களும் தங்கள் தரப்பில் விழிப்­பு­ணர்­வுடன் இருப்­பது அவ­சியம். அடிப்­ப­டை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை, எல்­லாரும் பின்­பற்ற வேண்டும் என, வல்­லு­னர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
டெபிட் கார்டு பாது­காப்­பிற்­காக செய்ய வேண்­டி­யவை:
* வங்­கி­க­ளிடம், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, பணப் பரி­வர்த்­தனை தொடர்­பான தக­வல்­களை, உடனுக்­குடன் பெற வேண்டும்* டெபிட் கார்டு பரி­வர்த்­த­னையை, தொடர்ந்து கண்­கா­ணித்து சந்­தே­கத்­திற்கு உரிய பரி­வர்த்­த­னையை கண்­ட­றி­வதில் கவ­ன­மாக இருக்க வேண்டும்* ரக­சி­ய­மான பின் எண்ணை, அடிக்­கடி மாற்ற வேண்டும். ஒவ்­வொரு மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மாற்ற வேண்டும் அல்­லது குறைந்­த­பட்சம், ஆண்­டுக்கு ஒரு­முறை மாற்ற வேண்டும்* வேறு வேறு கார்­டு­க­ளுக்கு, வேறு பின் எண்­களை பயன்­ப­டுத்த வேண்டும்* பின் எண் அல்­லது மற்ற தக­வல்­களை, யாரிடமும் தெரி­விக்க வேண்டாம்* வங்­கிகள் ஒரு­போதும் பின் எண் போன்ற­வற்றை கோரு­வ­தில்லை. இத்­த­கைய செய்­திகள், மோசடி வலை­யாக இருக்­கலாம் என அறி­யவும்* விற்­பனை மையங்கள் கார்டு பயன்­படுத்தும் போது, கார்டை ஊழி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பது அல்­லது பின் எண்ணை தெரி­விப்­பது போன்­ற­வற்றை தவிர்க்­கவும்* பின் எண்ணை டைப் செய்யும் போது, யாரது கண்­ணிலும் படாமல் அல்­லது கண்­கா­ணிப்பு கேம­ராவில் பதி­வா­காத வகையில், கைகளால் மறைத்துக் கொள்­ளவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)