தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ... மஹாராஷ்டிரா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு மஹாராஷ்டிரா ஆரஞ்சு வரத்து அதிகரிப்பு ...
சூடு பிடிக்கும் 'ஆன்லைன்' பட்டாசு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
11:52

சென்னை : தீபாவளிக்கு, 'ஆன்லைன்' வழியிலான பட்டாசு விற்பனை, சூடுபிடித்து உள்ளது.
தீபாவளிக்கு பட்டாசு வாங்க, மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், இணையதளம் வழியே முன்பதிவு செய்வது,ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இந்தஆண்டும்,ஆன்லைன் விற்பனை சூடுபிடித்து உள்ளது. போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் தவிர்க்கப்படுவதே இதற்கு காரணம். இது குறித்து, சிவகாசியை சேர்ந்த, தீபாவளி ஆன்லைன் பட்டாசு வியாபாரி எம்.சங்கரநாராயணன் கூறியதாவது:
ஆண்டுதோறும், ஆன்லைன் வழியே பட்டாசு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக, தீபாவளியின் போது, 20 சதவீதம் விற்பனை கூடியது. கடந்த ஆண்டு, எங்கள் இணைய தளத்தை,தினமும், 100 பேர் பார்த்தனர். தற்போது, இருமடங்காக அதிகரித்துள் ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக ஆர்டர்கள் வருகின்றன.
சென்னையில், கோயம்பேடு போன்ற பொதுவான இடத்திற்கு சரக்குகளை அனுப்பி, அங்கிருந்து, 'டெலிவரி' செய்யலாம். சிவகாசியில் உள்ள, 2,000 கடைகளில் பெரும்பாலானோர், ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், சென்னையை சேர்ந்த, 'கிராக்கர் பேஸ்கட்' என்ற, சில்லரை வணிக நிறுவன இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது: ஆன் லைனில் முன்பதிவு செய்தால், வீட்டிற்கு டெலிவரி தருகிறோம்; குறைந்த பட்சம், 3,000 ரூபாய்க்கு வாங்க வேண்டும். தற்போது, பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. கடைசி நேரத்தில், பலர் ஆர்டர் செய்வதால், டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன், டெலி வரியை நிறுத்தினால் தான், தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்; அது, பலருக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)