பதிவு செய்த நாள்
25 அக்2016
10:20
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று(அக்., 25-ம் தேதி) சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டு தற்காலிக தலைவராக ஏற்கனவே பொறுப்பில் இருந்த ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வெளிப்பாடாக அந்நிறுவனத்தை சேர்ந்த பெருவாரியான பங்குகள் சரிவை சந்தித்தன. இதன்தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன.
வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 91.22 புள்ளிகள் சரிந்து 28,087.86-ஆகவும், நிப்டி 22.45 புள்ளிகள் சரிந்து 8,686.50-ஆகவும் இருந்தன.
டாடா குழும நிறுவன பங்குகளான டாடா ஸ்டீல், டாடா கம்யூனிகேசன், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட அநகே பங்குகள் சுமார் 3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|