பதிவு செய்த நாள்
26 அக்2016
07:32
புதுடில்லி : இந்திய சுற்றுலா துறையில் முதலீடு செய்யுமாறு, ஜப்பான் நாட்டுமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, ஜப்பான் நாடுகளின் சுற்றுலா துறை சார்பில் நடந்த கருத்தரங்கத்தில், சுற்றுலா துறை இணைச் செயலர், சுமன் பில்லா கூறியதாவது:சுற்றுலா துறையை மேம்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில், சுற்றுலா துறையை சார்ந்துள்ள ஓட்டல், ரிசார்ட், மாநாட்டு மையம், பொழுது போக்கு பூங்கா, சொகுசு கப்பல் போன்ற வற்றில், அதிக வாய்ப்புகள் உள்ளன. அவற்றில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
தற்போது, ஜப்பானில் இருந்து, ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்தியாவில் இருந்து, 80 ஆயிரம் பேர்,ஜப்பானுக்கு செல்கின்றனர். இந்த எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|