பதிவு செய்த நாள்
26 அக்2016
07:34
புதுடில்லி : மத்திய அரசு அமைத்துள்ள, திவால் ஒழுங்குமுறை வாரியத்திற்கான விதிமுறைகள், வரும் நவம்பரில் இறுதி செய்யப்பட்டு, வரைவறிக்கை வெளியிடப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நலிந்த நிறுவனங்களை, திவால் நிலையில் இருந்து மீட்கவும், அவ்வாறு முடியாத பட்சத்தில், திவால் நடைமுறையை விரைந்து முடிக்கவும் உதவும், புதிய திவால் சட்டத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், நிறுவனங்கள், திவால் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணலாம். மேலும், நலிவுற்ற நிறுவனங்களின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும், புதிய திவால் சட்டம் உதவும். இதையடுத்து, மத்திய அரசு, திவால் சார்ந்த விவகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க, ஐ.பி.பி.ஐ., எனப்படும், திவால் ஒழுங்குமுறை வாரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாரியத்தின் தலைவராக, எம்.எஸ்.சாஹு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தலைமையில், தற்போது, நான்கு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், ஆறு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த வாரியத்திற்கான வரைவு விதிமுறைகள், மத்திய நிதியமைச்சகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவற்றின் மீது, திவால் சட்ட வல்லுனர்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் கருத்துக்களை தெரிவிக்க, இம்மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
அக்கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த மாதம் வரைவறிக்கையில், தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இதையடுத்து, இறுதி வரைவறிக்கை, வரும் நவம்பர் மத்தியில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|