பதிவு செய்த நாள்
27 அக்2016
07:35
மும்பை : யெல்லோ டை நிறுவனம், ஐந்து ஓட்டல்களை துவக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில், யெல்லோ டை ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ஓட்டல் மற்றும் உணவகங்களை, பல இடங்களில் நடத்தி வருகிறது. தற்போது அந்நிறுவனம், புதிதாக, ஐந்து உணவகங்களை துவக்க திட்டமிட்டு உள்ளது. இவற்றில், பஞ்சாப், ஐதராபாத் போன்ற நகரங்களில், புகழ்பெற்ற உணவு வகைகள் விற்கப்பட உள்ளன. இந்நிறுவனம், முக்கிய நகரங்கள் தவிர்த்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும், உணவகங்களை துவக்க உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, எங்கள் நிறுவனம், புதிய இடங்களில் உணவகங்களை அமைத்து வருகிறது. இதற்காக, 1.50 கோடி – இரண்டு கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. வரும், 2019க்குள், 100 உணவகங்கள் துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|