பதிவு செய்த நாள்
27 அக்2016
07:35
கொச்சி : கொச்சியில், பெட்ரோலிய ரசாயன பூங்கா ஒன்றை அமைக்க, கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில், ‘கின்ப்ரா’ எனும் கேரளா தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், பெட்ரோலிய ரசாயன பூங்கா ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பூங்கா, 1,864 கோடி ரூபாய் செலவில், 600 ஏக்க ரில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு, கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
இது குறித்து, கின்ப்ரா நிர்வாக இயக்குனர் பீனா கூறியதாவது:இந்தியாவில், ரசாயன தொழில் துறை ஆண்டுதோறும், 11 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கொச்சியில் அமைக்கப்படும் பெட்ரோலிய ரசாயன பூங்காவில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இயற்கை எரிவாயு முனையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. கொச்சியில், பாரத் பெட்ரோலியத்துக்கு, ஆண்டுக்கு, 95 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறனில் ஆலை உள்ளது. அதை, 1.55 கோடி டன்னாக அதிகரிக்க, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|