தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ... மின் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் : மின் கட்டணம் உயர்த்த பரிந்துரை மின் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் : மின் கட்டணம் உயர்த்த பரிந்துரை ...
வெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவு : விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
14:13

பெங்களூரு: விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறியதாவது:˜ அரசு ஊழியர்கள் நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுக்கே வழங்கவும், ஒரு வேளை மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கவில்லை என்றால், அந்த இடம் காலியாக வைக்கப்பட்டு, அடுத்த முறை வழங்கப்படும்˜ 'ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்' 17வது தேசிய மாநாட்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்க அனுமதி˜ கிராமப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த அதிகாரிகள் நியமனம்˜ கலபுரகி பெரிபெரல் கேன்சர் மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய, 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு˜ பாவகடா மற்றும் டி.நரசிபுரா ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த, டாக்டர் ரேவதி, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லோக் ஆயுக்தா போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது˜ வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது தொடர்பாக, அமைச்சரவையில் விரிவாக பேசப்பட்டது. மூன்றரை லட்சம் ஏக்கரில், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது. விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஒரு கிலோவுக்கு, 11 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி மத்திய அரசை கேட்கவுள்ளோம். அவர்களின் முடிவை பார்த்து, மாநில அரசு தீர்மானிக்கும்˜ வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு, மார்க்கெட்டில் வெங்காயம் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது˜ கர்நாடகத்தில், 110 தாலுகாக்களில் வறட்சியால், 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தாலுகாக்களுக்கு, 3,343 கோடி ரூபாய் வழங்க தேசிய பேரிடர் மீட்பு குழு நிதியிலிருந்து வழங்கும்படி மத்திய அரசுக்கு, கடிதம் அனுப்பப்படும்˜ கலபுரகி, பீதர் மாவட்டங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பேரிடர் மீட்பு குழுவிடமிருந்து, 386 கோடி ரூபாய் வழங்கும்படி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது˜ இதற்காக, கர்நாடக விவசாய துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, வருவாய் துறை அமைச்சர் திம்மப்பா, மத்திய அமைச்சரவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கவுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)