வெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவு : விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவிப்புவெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவு : விவசாயிகளின் நலனுக்காக அரசு ... ... குறையும் மிளகாய் சாகுபடி : விழிக்குமா தோட்டக்கலை துறை? குறையும் மிளகாய் சாகுபடி : விழிக்குமா தோட்டக்கலை துறை? ...
மின் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் : மின் கட்டணம் உயர்த்த பரிந்துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2016
14:19

பெங்களூரு: மின்கட்டணத்தை, ஒரு யூனிட்டுக்கு, 1.30 ரூபாய் முதல், 1.40 ரூபாய் வரை அதிகரிக்கும்படி, கர்நாடக மின் ஒழுங்குமுறை வாரியம் - கே.இ.ஆர்.சி.,யிடம் கோரிக்கை விடுக்க, அனைத்து மின் வினியோக நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.ஆண்டுதோறும் நவம்பர் இறுதிக்குள், மின் கட்டண உயர்வு குறித்து, அனைத்து மின் வினியோக நிறுவனங்களும், கே.இ.ஆர்.சி., கோரிக்கை அனுப்ப வேண்டும்.ஒட்டு மொத்த விடுமுறை : அதன் பின் பொது மக்கள் கருத்துகளை கேட்டறிந்து, மின் கட்டணம் உயர்த்துவது குறித்து, கே.இ.ஆர்.சி., முடிவெடுக்கும். புதிய மின் கட்டண உயர்வு ஏப்ரலிலிருந்து அமலுக்கு வரும். வழக்கம் போல நடப்பாண்டும், மின் கட்டணத்தை உயர்த்தும்படி, கே.இ.ஆர்.சி., யிடம் கோரிக்கை விடுக்க, மின் வினியோக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அதற்கு முன், அனைத்து மின் வினியோக நிறுவனங்களும், தங்களின் வரவு, செலவு கணக்கு விபரங்களை அக்கவுன்டன்ட் ஜெனரலிடம் சமர்ப்பிக்க வேண்டும். இங்கு ஒப்புதல் கிடைத்தவுடன், மின் துறை அமைச்சருடன் கூட்டம் நடத்தப்படும். கடன், நஷ்டத்தின் அளவை கணக்கிட்டு, மின் கட்டணத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பின், கே.இ.ஆர்.சி.,யிடம் பரிந்துரை செய்யப்படும்.தற்போது வரவு, செலவு விபரங்களை தாக்கல் செய்வதில், மின் வினியோக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மின் கட்டணத்தை, 1.30 ரூபாய் முதல், 1.40 ரூபாய் வரை அதிகரிக்கும்படி, மின் வினியோக நிறுவனங்கள், கே.இ.ஆர்.சி.,யிடம் கோரிக்கை விடுக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிறுவனங்கள் கோரும் அளவுக்கு, மின் கட்டணத்தை கே.இ.ஆர்.சி., உயர்த்துவதில்லை. அனைவரின் கருத்தை கேட்டறிந்த பின்னரே தீர்மானிக்கும்.நான்காயிரம் கோடி ரூபாய் பாக்கிமின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, மாநிலத்தின் பெங்களூரு பெஸ்காம், மங்களூரு மெஸ்காம், ஹூப்பள்ளி ஹெஸ்காம், கலபுரகி ஜெஸ்காம், மைசூரு சாமுண்டீஸ்வரி ஆகிய ஐந்து மின் வினியோக நிறுவனங்களும், 2,500 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளன. இவற்றில் ஹெஸ்காம், ஜெஸ்காம் நிறுவனங்களின் நஷ்டத்தின் அளவே அதிகம்.இந்நிறுவனங்கள் மின்சாரம் வாங்கியதற்காக, கர்நாடக மின்சார கார்ப்பரேஷனுக்கு தர வேண்டிய பாக்கி தொகை, 12 ஆயிரம் கோடி ரூபாய் உட்பட, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இந்த தொகை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.கிராமங்கள், நகரங்களுக்கு மின்சாரம் வினியோகிப்பதற்காக, கிராம அபிவிருத்தி, நகர அபிவிருத்தி துறைகள், மின் வினியோக நிறுவனங்களுக்கு, முறையாக கட்டணம் செலுத்துவதில்லை. இவ்விரு துறைகளும் நான்காயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. ஆனால், மின்சாரம் பெறுவதை மட்டும் நிறுத்துவதில்லை என, மின் வினியோக நிறுவனங்கள் புலம்புகின்றன.குளிர்காலம் துவங்குவதற்கு முன், வறட்சி சூழ்நிலையை எதிர் கொண்டுள்ள மாநில மக்கள், மின் கட்டண உயர்வையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)