பதிவு செய்த நாள்
27 அக்2016
14:58
வேளாண் பல்கலை எச்சரித்துள்ளதால், தமிழகத்தில், மிளகாய் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம், தோட்டக்கலைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டில், ஆண்டுதோறும், 16 லட்சம் டன் அளவிற்கு மிளகாய் உற்பத்தி நடக்கிறது. ஆந்திராவில், 49 சதவீதம்; கர்நாடகாவில், 18 சதவீதம்; தமிழகத்தில், 3 சதவீத உற்பத்தியும் நடக்கிறது. தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில், 1 லட்சம் ஏக்கர் பரப்பில், அக்., மாதம் மிளகாய் சாகுபடி துவங்கும். இந்த மாவட்டங்களில் சாகுபடியை துவக்காமல், விவசாயிகள் அமைதி காத்துள்ளதால், இதுவரை சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை. வழக்கமான அளவை விட, சாகுபடி பரப்பு குறைய வாய்ப்புள்ளது. அதே நேரம், ஆந்திராவில், இந்தாண்டு மிளகாய் உற்பத்தி, 28 சதவீதம் அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே, மிளகாய் தேவைக்கு ஆந்திராவை நம்பும் நிலை உருவாகும். 'சாகுபடி பரப்பு குறைவால், மிளகாய் விலை உயரும்; மக்களை பாதிக்கும். எனவே, மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை எச்சரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|