பதிவு செய்த நாள்
27 அக்2016
16:06
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக காலையில் சரிவுடன் துவங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது ஏற்றம் அடைந்தன. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததன் காரணமாகவும், மாருதி சுசுகி, ஓஎன்ஜிசி போன்ற இந்திய நிறுவனங்களின் 2வது காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக அறிவித்ததன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன.இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 79.39 புள்ளிகள் உயர்ந்து 27,915.90 புள்ளிகளாகவும், நிப்டி 4.15 புள்ளிகள் உயர்ந்து 8611.10 புள்ளிகளாகவும் உள்ளன. ஹச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|